ஒரு குரங்கு மற்றும் கிழட்டு மார்க்ஸ்

தோழமைப் பிரதிகள்

தமிழில்: அனுசூயா சிவநாராயணன் ஒரு குரங்கு -விளாடிஸ்லாவ் கொடசேவிச் ருஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்தில்: விளாடிமிர் நபோகோவ் அன்று வெப்பம் தகித்தது பெரும் காடுகள் பற்றி எரிகின்றன நேரம் தன் கால்களைப் புழுதியில் இழுத்தது பக்கத்து முற்றத்தில் ஒரு சேவல் கூவுகின்றது. நான் தோட்டத்துப் படலையைத் திறக்கும் போதுதான் கவனித்தேன் தெருவோரத்து பெஞ்சின் மீது ஒரு சேர்பியன் தூங்கிங்கொண்டிருக்கிறான் மெலிந்தும் கறுத்துமிருந்த அவன் மேனியில் பாதி திறந்த மார்பில் ஒரு பெரிய வெள்ளிச் சிலுவை வழியும் வியர்வையை பாதை […]

ஓபாமா x ஓசாமா: தேசம், மதம், மானுடம்

கட்டுரைகள் ராஜன் குறை

மானுட வரலாற்று நிலையும், தமிழில் சமூக அறிதலும் குறித்த குறிப்புகள் – ராஜன் குறை பகுதி 1: அமெரிக்கா, நவம்பர் 2008. நவம்பர் 4 ஆம் தேதி, அமெரிக்காவில் வரலாறு தன் முகத்தை மீண்டும் காட்டியது. ஒருபுறம், கடவுளைக் கண்டது போல வரலாற்றுவாதிகள் மகிழ்ந்தனர். இன்னொரு புறம், நள்ளிரவில் நியூயார்க் நகர வீதிகளில் மக்கள் ஆடிப்பாடினார்கள். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் மகிழ்ச்சி யாரையும் நெகிழச் செய்வதாய் இருந்தது. மனிதர்களாகவே நடத்தாத, ஓட்டுப் போடும் உரிமைக்காக போராட வைத்த அமெரிக்க […]

நெடுங்குருதி: Behind the scene

கட்டுரைகள்

-ஷோபாசக்தி வெலிகடைப் படுகொலைகளின் நினைவுநாள் முடிந்து, கந்தன் கருணைப் படுகொலைகளின் நினைவு நாளும் வரப்போகிறது. ஆனால் வெலிகடைச் சிறைப் படுகொலைகளின் இருபத்தைந்தாவது வருடத்தை நினைவு கூர்ந்து நாங்கள் பிரான்ஸில் நடத்திய ‘நெடுங்குருதி’ நிகழ்வின் மீதான அவதூறுகளும் சேறடிப்புகளும் இன்னும்தான் ஓயவில்லை. இம்மாத ‘தீராநதி’ இதழின் எதிர்வினைப் பகுதியில் அசோக் ‘நெடுங்குருதி’ நிகழ்வு மீதான உச்சக்கட்ட அவதூறுகளையும் தோழர் அ. மார்க்ஸின் மீதான தனது நீண்டகாலக் காழ்ப்புணர்வையும் கொட்டித் தீர்த்திருக்கிறார். நெடுங்குருதி நிகழ்வு குறித்து அவதூறுகளும் தவறான செய்திகளும் […]

நூல் விமர்சன அரங்கு – லண்டன்

அறிவித்தல்கள்

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியுடன் இணைந்து இலங்கை ஜனநாயக ஒன்றியம் (லண்டன்) நடத்தும் நூல் விமர்சன அரங்கு:   இலங்கையில் சாதிய முறையின் தோற்றம், அதன் இயங்குதிசை, தாழ்த்தப்பட்ட மக்களின் சாதியத்திற்கெதரான போராட்டத்தின் நீண்ட வரலாறு, சாதியப் போராட்டத்தில் இடதுசாரிகளின் பங்களிப்பு, தமிழ்த் தேசியமும் சாதியமும் என விரிந்த தளத்தில் வெகுஜனன் (சி.கா. செந்திவேல்) இராவணா (ந.இரவீந்திரன்) இணைந்து எழுதிய வரலாற்று ஆய்வு நூலின் செழுமைப்படுத்தப்பட்ட புதிய பதிப்பு:   “இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்”   தாழ்த்தப்பட்ட […]

பின்நவீனத்துவ நாடோடிகள்

கட்டுரைகள்

கலா: குருநகர், கிளிநொச்சி, பண்டிவிரிச்சான், மன்னார், மண்டபம், சென்னை, ஸ்ருட்கார்ட், போ இப்படியாக அலையும் நாடோடி.தற்காலிக முகவரி :ஒல்நே சு புவா சிவராசா: பத்துவருடங்களாக விசாவற்றவரும், கலாவின் கணவரும், இரண்டு குழந்தைகளின் தந்தையும். “அப்பா, உங்கண்டை பத்துறோன் வந்து நிக்கிறானப்பா!” “திற,திற” “சிவராசா!சவாப்பா!” “பொன்சூர் மிசியூ!” “ரிகோல்பா!” “பியர் குடிக்கிறீர்களா?” நோ!நோ!வா தபியே!, டெபேஸ்துவா!” “நான் வரயில்லை!வரமாட்டேன்!வேலை செய்த காசு இருந்தா கணக்குப்பாத்துத் தந்துவிட்டுப்போ!” “இஞ்சைபார்!உனக்கு விசா இல்லை!இதோடை நாலுபேற்ரை விசா மாத்திப்போட்டாய்! இப்பசெய்யிற விசாக்காறனுக்கு மாதம் […]

Refugees still buy into the propaganda

நேர்காணல்கள்

www.expressbuzz.com  :26 Oct 2008 Shobasakthi is many things: traveller, writer, blogger and — most importantly in this context — an LTTE child soldier once and a refugee. He is also a vocal member of the international community of refugees created by years of ethnic conflict in Sri Lanka. Sobasakthi’s novel, Gorilla, is the key to […]

எம்.சி: வழியும் வழிகாட்டியும்

கட்டுரைகள்

“எம்.சி.ஒரு சமூக விடுதலைப் போராளி” தொகுப்பிற்கு எஸ்.பொ.அளித்த முன்னீடு: எம்.சி. இலங்கையிலே தோன்றிய சமூகப்போராளிகளுள் ஒரு முன்னோடி: முதன்மையானவர்.யாழ்ப்பாண மாநிலத்தின் இருபதாம் நூற்றாண்டு சமூக வரலாற்றை எழுதமுயலும் எவரும் எம்.சி.யின் பங்களிப்பினைச் சிரத்தையில் கொள்ளாது தமது படிப்பாய்விற்கு முழுமை சேர்த்தல் சாலாது. இருபதாம் நூற்றாண்டின் முதல் மூன்று கந்தாயங்களின் வரலாறு இலங்கை வாழ் யாழ்ப்பாண வெள்ளாளர்களின் அதிகாரத்தினதும், அந்த அதிகாரத்தினை என்றும் தம்முடன் தக்க வைத்துக்கொள்வதற்கு அவர்கள் மேற்கொண்ட செயற்பாடுகளினதும்,உபவிளைவான அரசியல் நிலைப்பாடுகளினதும் வரலாறு என்றுதான் எனக்குத் […]