பிரபாகரன் ஜீவிக்கிறார்

கட்டுரைகள்

சரியாக இருபத்தைந்து வருடங்களிற்கு முன்பாக நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாமில் இருந்தபோது ஒவ்வொருநாள் காலையிலும் நாங்கள் ஏற்கும் உறுதிமொழியின் வாசகங்கள் இப்போது எனக்கு முழுமையாக ஞாபகத்திலில்லை எனினும் அந்த உறுதிமொழியின் முதல் வரியும் இறுதி வரியும் எனக்கு இன்னமும் நினைவிலுள்ளன. உறுதிமொழியின் முதல்வரி “எமது புரட்சிகர இயக்கத்தின் புனித இலட்சியமாம் சோசலிஸ தமிழீழம் அடைய” என்பதாய் இருக்கும். இறுதிவரி “எனது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு விசுவாசமாக இருப்பேனென்றும் உறுதியேற்கிறேன்” என்பதாக இருக்கும். தலை பிளக்கப்பட்டுக் […]

தமிழ்நதிக்கு மறுப்பு

கட்டுரைகள்

நிரம்பவும் கபடமாகத்தான் பேசுகிறார் தமிழ்நதி. அமரந்தாவின் கடிதம் என்ற கட்டுரையில் “எழுத்தாளர் தமிழ்நதி போன்ற பொய்க்குப் பிறந்தவர்கள் ‘அப்படிப் புலிகள் பிடித்து வைத்திருப்பதாகச் சொல்வது பொய்’ என்று தமிழக ஊடகங்களில் பரப்பிய அப்பட்டமான பொய்யை நீங்களும் நம்புகிறீர்களா? பணயமாகப் பிடித்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்யுமாறு புலிகளிடம் வலியுறுத்திச் சொல்ல வேண்டிய நேரத்தில் “விரும்பியே மக்கள் புலிகளுடனிருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு, இன்று “என்னை அழவிடுங்கள்” என்று மாய்மாலம் போடும் தமிழ்நதி வகையறாக்களின் முதலைக் கண்ணீரை நீங்கள் புரிந்தகொள்ளவே போவதில்லையா?” […]

அமரந்தாவின் கடிதம்

கட்டுரைகள்

இலங்கை அரசிற்கு ஆதரவாக அய். நாவின் மனித உரிமைகள் அவையில் கியூபா, நிக்கரகுவா, பொலிவியா போன்ற நாடுகள் கையெழுத்திட்டதைக் கடுமையாகச் சாடி லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகத்தைச் சேர்ந்தவரும் எழுத்தாளருமான அமரந்தா ஒரு கண்டனக் கடிதத்தை கியூபா தூதரகத்திற்கும் பல்வேறு லத்தீன் அமெரிக்கத் தலைவர்களிற்கும் அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதம் நாகார்ஜுனனின் வலைப்பதிவிலும் ‘கீற்று’ இணையத்திலும் வெளியாகியிருக்கிறது. நமது கனவு நாடுகளான இந்த நாடுகள் இலங்கை அரசின் இனப்படுகொலையைக் கண்டிக்காமல் இலங்கை அரசிற்குத் துணைநின்றது மிகவும் வருத்தத்திற்குரியது. குறிப்பாக […]

கவிதை ஒன்றுகூடல்: உரையாடல் – 2

அறிவித்தல்கள்

இடம்: AICUF அரங்கம் – சென்னை நாள்: 26 ஜுன் 2009 வெள்ளிக்கிழமை மாலை 4-9 மணிவரை முற்றுப் பெறாத துர்க்கனவாய், தீராத நெடுவழித் துயராய், ஈழத்தின் வரலாறு நம்மை வதைத்தபடியே கடந்துபோகிறது. மரணத்திற்கு மத்தியிலும், நிலம் அகன்றும், வாழ்ந்தும், எழுதியும் வரும் ஈழத்தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடலை தமிழக்கவிஞர்கள் இயக்கம் ஒருங்கிணைக்கிறது. பன்முக வாசிப்பு: பெயல் மணக்கும் போது /தொகுப்பாளர்: அ.மங்கை வ.ஐ.ச ஜெயபாலன் எனக்கு கவிதை முகம்/ அனார் செல்மா பிரியதர்சன் சூரியன் தனித்தலையும் […]

தமிழில் நவீன இலக்கியம் இருக்கிறதா

கட்டுரைகள்

-ம.நவீன் ஷோபாசக்தியைப் பற்றி கூற முதலில் நான் பிரான்ஸ் போக வேண்டியுள்ளது. லண்டன் நகரில் ‘வல்லினம்’ அறிமுக நிகழ்விற்காகச் சென்ற எனக்கு பிரான்ஸில் வசிக்கும் ஷோபாசக்தியைப் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது. சில நேர்காணல்கள் வழியும் அவரின் ‘கொரில்லா’ மற்றும் ‘ம்’ நாவல்கள் தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்திய அதிர்வின் வழியும் நான் அவரை ஓரளவு அறிந்து வைத்திருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் மனுஷ்ய புத்திரன் இல்லத்தில் தங்கியிருந்த ஓர் இரவில் அவர் சிலாகித்து பேசிய இரண்டு […]

கடிதம்: பா.செயப்பிரகாசத்திற்கு மறுப்பு‏

கடிதங்கள்

பா.செயப்பிரகாசம் கதைகளில் வெளிப்படும் யதார்த்தமான மனித நேயமும் மனிதர்களும் கவனிக்கத்தக்க அம்சங்கள். அவரின் அரசியல் குறித்து இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு படைப்பாளியும் அவனது அரசியல் நிலைபாடுகளாலும் கருத்துகளாலும் சமூகத்தால் நிராகரிக்கப்படுவதும் மதிப்பீடப்படுவதும் இயல்பாக நடக்கக்கூடியது. ஈழப் போராட்டம் குறித்து, இன்று புலிகளை மட்டுமே முன் வைத்து, அதாவது ஈழப் போராட்டம் என்றாலே விடுதலை புலிகள் என்று ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்தும் அரசியல் பார்வையைப் பல எழுத்தாளர்கள் கொண்டுள்ளார்கள். அதற்கு அவர்களே பொறுப்பு. இன்று உலகம் முழுவதும் […]

கவிதை ஒன்றுகூடல்: உரையாடல்

அறிவித்தல்கள்

கடந்த இரண்டாண்டுகளில் வெளிவந்த சில நவீன கவிதைப் பிரதிகளை முன்வைத்து ஆய்வுகளையும் உரையாடல்களையும் ‘தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்’ முன்னெடுக்கிறது. நவீன தமிழ்க் கவிதையில் உருவாகியிருக்கும் பன்மைத்துவப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தி அவற்றின்மேல் மனத்தடைகளற்ற விவாதங்களை உருவாக்குவது, நகர வேண்டிய திசைவெளி, தூரங்கள் குறித்த பிரக்ஞையைக் கண்டடைவது சாதி, இனம், மொழி, மதம் என்னும் உள்ளுர் தேசியப் பிடிமானங்களிலிருந்தும் பண்டம், சந்தை, போர், மரணம் என்னும் உலகளாவிய நெருக்கடிகளிலிருந்தும் தமிழ்க் கவிதை எதை உள்வாங்கியது எவற்றிலிருந்து விலகி நிற்கின்றது என […]