வல்லினம்

அறிவித்தல்கள்

எழுத்தாள/வாசக நண்பர்களுக்கு வணக்கம். ‘வல்லினம்’ மலேசியாவிலிருந்து வெளிவரும் கலை, இலக்கிய மாத இணைய இதழாகும். http://www.vallinam.com.my என்ற அகப்பக்கத்தில் நீங்கள் வல்லினத்தை வலம் வரலாம். தற்போது அக்டோபர் 2009 (இதழ் 10) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வல்லினம் இதழ் புதுப்பிக்கப்படும்போது மின்னஞ்சல் வழியாக தங்களுக்குத் தகவல் அனுப்பப்படும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வல்லினம் இதழ் மற்றும் வல்லினம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்கள் மட்டுமே மின்னஞ்சலாக தங்களுக்கு அனுப்பப்படும். தங்கள் படைப்புகள் மற்றும் […]

அரசு, இறையாண்மை, ஆயுதப் போராட்டங்கள்

அ.மார்க்ஸ் கட்டுரைகள்

அ. மார்க்ஸ் ஈழப் போராட்டப் பின்னணியில் இறையாண்மை (sovereignty) குறித்த பேச்சுக்கள் இன்று தமிழ்ச் சூழலில் தலைகாட்டியுள்ளன. 1970களில், வங்கப் பிரச்சினையில் (முன்னாள் கிழக்கு பாகிஸ்தான்) இந்தியா தலையிட்டு ‘வங்கதேசம்’ உருவாவதற்கு வழி வகுத்ததுபோல புலிகளுக்கு எதிரான ராஜபக்சே அரசின் வெறித்தனமான தாக்குதலில் தலையிட்டு (புலிகளின் தலைமையில்) தனி ஈழம் பெற்றுத் தரவேண்டும் என்கிற கோரிக்கையை இங்கேயுள்ள புலி ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்தபோது அரசு தரப்பில் இறையாண்மை குறித்த கதையாடல் முன் வைக்கப்பட்டது. மற்றொரு நாட்டின் இறையாண்மையில் […]

எனக்கு நிறையக் கண்கள்

கட்டுரைகள்

‘வல்லினம்’ இணைய இதழ் அறிமுகம் -கவின் மலர் இன்றைய நிலையில் தீவிர வாசிப்புக்குரிய அனைத்து தன்மைகளோடும் ஒரு பத்திரிகை நடத்துவது என்பது அத்தனை எளிதல்ல. எந்தவித கைமாறும் எதிர்பார்க்காமல் இருந்தாலொழிய அது சாத்தியமில்லை. சிரமப்பட்டு கையிலிருந்து பணம் செலவழித்து இதழ் நடத்தி ஒரு கட்டத்தில் முடியாமல் போக அதை நிறுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் ஏற்படும் வலி ‘வல்லினம்’ ஆசிரியர் குழுவுக்கும் ஏற்பட்டிருக்கும். அதன் வாசகர்களுக்கோ அதைவிட பெரிய வலி. இருதரப்பினரின் வலிநிவாரணியாக வந்திருக்கிறது http://www.vallinam.com.my/ இணைய இதழ். […]

திசநாயகத்தை விடுதலை செய்!

அறிவித்தல்கள்

இலங்கை அரசே! தமிழர்கள் வாழ்வுரிமைக்காக பாடுபட்ட பத்திரிகையாளர் ஜே.எஸ். திசநாயகத்தை விடுதலை செய்! பத்திரிகை சுதந்திர பாதுகாப்புக் கூட்டம் நாள்: செப்டம்பர் 8, 2009, செவ்வாய் காலை 10 மணி இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம், அரசினர் ஓமந்தூரார் தோட்டம், சென்னை – 2 பங்கேற்பு : திரு. இரா.ஜவஹர், மூத்த பத்திரிகையாளர் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர், தமுஎகச திரு. பாரதி தமிழன், சென்னை பத்திரிகையாளர் மன்றம் திரு. ஆர். மோகன், சென்னை பத்திரிகையாளர் சங்கம் […]

நான் எப்போது அடிமையாயிருந்தேன்!

நேர்காணல்கள்

நேர்காணல்: புஸ்பராணி ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவர் தோழியர் புஸ்பராணி. தலைமறைவுப் போராளிகளிற்குச் சோறிட்டு வீட்டிற்குள் தூங்கவைத்துவிட்டு, பட்டினியுடன் வீட்டு வாசலில் காவலிருந்த ஒரு போராளிக் குடும்பத்தின் மூத்த பெண்பிள்ளை. ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்” தந்த மறைந்த தோழர் சி.புஸ்பராஜாவின் மூத்த சகோதரி. அறுபது வயதை நெருங்கும் பராயத்திலும் அரசியற் கூட்டங்கள், இலக்கியச் சந்திப்புகள், பெண்கள் சந்திப்புகள், தலித் மாநாடுகள் என உற்சாகமாகத் தனது பங்களிப்பைச் செலுத்திக்கொண்டிருப்பவர். தனக்குச் சரியெனப்பட்டதை எந்தச் சபையிலும் சந்தர்ப்பத்திலும் எதற்கும் […]

பிறழ் சாட்சியம்

கட்டுரைகள்

மறுபடியும் ஒருமுறை வெறுப்புடன் அந்த வாசகத்தை உச்சரிக்க வேண்டியிருக்கிறது: “கொடியவர்கள் இழைக்கும் கொடுமைகளிலும் பார்க்க அவற்றை நீதியான மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மவுனமாய் சகித்துக்கொண்டிருப்பது குறித்தே நாம் இந்தந் தலைமுறையில் வருத்தமுற வேண்டும்” என்றார் மாட்டின் லூதர் கிங். நம்காலத்தில் மவுனத்தைக் கலைத்துக் கொடுமைகளை நியாயப்படுத்தும், திரிக்கும் நீதிமான்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சில நாட்களிற்கு முன்பு பிரித்தானிய தொலைக்காட்சியான ‘சனல் 4’ல் ஒளிபரப்பப்பட்ட அந்தக் கொடூரக் காட்சியில் மனிதர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இராணுவச் சீருடை அணிந்தவர்களால் பன்றிகளைப்போல […]

ஈழப் போராட்டமும் தமிழக ஆதரவாளர்களும்

அ.மார்க்ஸ் கட்டுரைகள்

– அ.மார்க்ஸ் தமிழ் அறிவுஜீவிகள் மத்தியில் ஒரு மரண அமைதி நிலவுவதாக சில நாட்களுக்கு முன் எழுத்தாள நண்பர் ஒருவர் கவலையோடு குறிப்பிட்டார். ஒரு சிலர் மத்தியில் ஒருவகை கையறு நிலையும் வேதனையும் நிலவுவது உண்மைதான். மே 18லிருந்து கிட்டத்தட்ட அடுத்த ஒரு வாரம் முழுவதும், வழக்கமாக என்னிடம் பேசுகிற பழக்கமில்லாத சில எழுத்தாள நண்பர்களும் கூட என்னைத் தொடர்பு கொண்டு “கேள்விப்படுவது உண்மைதானா?” என விசாரித்த வண்ணம் இருந்தனர். தொலைக் காட்சியில் காட்டப்படும் உடல் அவருடையது […]