கண்டி நகரத்திலிருந்து வடமேற்காக நாற்பது கிலோ மீற்றர்கள் தொலைவிலிருந்த புராதன புத்த விகாரையைச் சுற்றிப் பார்த்துவிட்டு நானும் கெய்லாவும் வெளியே வந்தபோது எங்களையே பார்த்துக்கொண்டு இரண்டு பொலிஸ்காரர்கள் வீதியில் நிற்பதைக் கண்டேன். நானும் கெய்லாவும் செருப்புகளை அணிந்துகொண்டு வீதிக்கு வந்தபோது, வீதியில் சனங்களும் கூடிநின்று எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதுவொரு மிகச் சிறிய நகரம். புத்த விகாரையைச் சுற்றியே அந்த நகரம் அமைந்திருந்தது. விகாரையின் முன்னால் ஏழெட்டுக் கடைகள் இருந்தன. அந்தப் பொலிஸ்காரர்கள் இருவரும் ஏதோ காரியமாகத்தான் எங்களையே […]
வீடென்பது பேறு
முன்னுரை – குவர்னிகா இலக்கியச் சந்திப்பு மலர் : இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் -கலைஞர்கள்- இலக்கிய வாசகர்களால் 1988ம் வருடம் ஜெர்மனியின் ‘ஹேர்ண்’ நகரத்தில் தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு இந்த இருபத்தைந்து வருடங்களில் நாற்பது சந்திப்புத் தொடர்களை மேற்கு அய்ரோப்பியத் தேசங்களிலும் கனடாவிலும் நிகழ்த்தி, அதனது நாற்பத்தியொராவது சந்திப்புத் தொடரைத் தாயகத்தில் நிகழ்த்தும் இந்தத் தருணம் உற்சாகமானதாகும். இலங்கையில் கொடிய போர் நடந்துகொண்டிருந்த காலங்களில், இலங்கையில் மிகக் கடுமையான கருத்துச் சுதந்திர அடக்குமுறைகள் நிலவிய […]
Best Untranslated Writers: Shobasakthi
The Best Untranslated Writers series – in which established writers select and showcase fellow writers from their own languages who are not yet widely translated or read – began with a trio of Brazilians on the writers they love most but are yet to make the leap into English. Today V.V. Ganeshananthan introduces us to […]
காணாமற்போனவர்
சிறுகதை: ஷோபாசக்தி எனக்கு எதிரே உட்கார்ந்திருந்த அந்த மனிதர், நான் தேடிக்கொண்டிருந்த பாவெல் தோழரைக் கொல்வதற்குத் தானே உத்தரவிட்டதாகச் சொல்லிவிட்டு ஒரு கோணல் சிரிப்புடன், பாதி நரைத்துப்போன அவரது மீசையில் படிந்திருந்த ‘பியர்’ நுரையை அழுத்தித் துடைத்துக்கொண்டார். நான் அவரையே வெறித்துப் பார்த்தவாறு இருந்தேன். இந்தக் கதை இன்னும் அய்ந்து நிமிடங்களில் முடியவிருக்கிறது. இந்தக் கதை இப்படித்தான் ஆரம்பித்தது. சென்ற கோடை காலத்தில் எனது அப்பா சென்னையில் இறந்துபோனார். அம்மா வேளாங்கண்ணி கோயிலுக்குப் போய்விட்டு மறுநாள் திரும்பி […]
மரக்காணம் சாதிக் கலவரம் : உண்மை அறியும் குழு அறிக்கை
மே 7, 2013 சென்னை சென்ற ஏப்ரல் 25 அன்று சென்னை – புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மரக்காணம் கிராமத்தை ஒட்டிய தலித் குடியிருப்பு ஒன்றில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே. வன்னியர் சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் நடத்துகிற சித்திரை முழுநிலவுக் கொண்டாட்டத்திற்குச் சென்ற வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கூட்டத்தினர் கட்டையன் தெரு என்னும் தலித் குடியிருப்பிலுள்ள ஏழு வீடுகளையும் மரக்காணம் பெட்ரோல் பங்க் அருகிலும், […]
இலக்கியச் சந்திப்பும் இயேசுக் கிறிஸ்துவும்
இலண்டனில் நடந்து முடிந்த 40வது இலக்கியச் சந்திப்பைக் குறித்து ஏப்ரல் 9ம் தேதி ‘தேசம் நெட்‘ வெளியிட்டிருந்த கட்டுரையின் ஒரு பகுதி இவ்வாறிருந்தது: “இந்த இலக்கியச் சந்திப்பில் நூலகவியலாளர் என். செல்வராஜாவின் நூற்றுக்கணக்கான இலக்கிய மற்றும் அரசியல் நூல்களை காட்சிப்படுத்த அனுமதிக்காமை, ஏற்பாட்டுக் குழு மிக மோசமான இலக்கிய அரசியல் தடையை மேற்கொள்வதாகவே உணர வேண்டியுள்ளது. இலக்கிய அரசியல் தேடலுக்கு விருந்தளிக்க வேண்டிய இலக்கியச் சந்திப்பு அதற்கு வழங்கிய காரணம் அவர்களின் குறுகிய பார்வையை வெளிப்படுத்தி நிற்கிறது. […]
தோழமையுடன் இலண்டன் இலக்கியச் சந்திப்புக் குழுவினருக்கு..
வணக்கம். 40வது இலக்கியச் சந்திப்புக் குறித்து நமக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை முடித்துக்கொண்டு நாமொரு பொது உடன்பாட்டை எட்டுவதற்காக இந்த வேண்டுகோளைப் பொதுவில் வைக்க விரும்புகின்றோம். 40வது இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்துவதற்கு நாம் விரும்புவதையும், இலங்கைக்கு சந்திப்புத் தொடர் எடுத்துச் செல்லப்பட வேண்டியதன் அரசியல் முக்கியத்துவத்தையும் நாங்கள் பாரிஸ் – 38வது இலக்கியச் சந்திப்பிலேயே வெளிப்படுத்தியிருந்தோம் என்பது அந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட நீங்கள்அறிந்ததே. எனினும் அது குறித்த முடிவை கனடா – 39வது சந்திப்பில் எடுப்பதாகத் […]