சுகனின் கவிதை – 03.03.2005

காலம் தேவையில்லை எங்கே என்பதும் தேவையில்லை யாரென்பதும் தேவையில்லை எப்படியென்பதைக் கேளுங்கள்   வீட்டிற்கு வந்தார்கள் “அவரிற்கு நாங்கள் மரணதண்டனை விதித்துள்ளோம்” என் மனைவியிடம் சொன்னார்கள் “எங்களிடம் தோட்டாக்கள் இல்லை தோட்டாக்கள் வாங்குவதற்குப் பணம் அதிகம் நாங்கள் அவரைத் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப் போகின்றோம்” என்றார்கள்; மேலும். ஊரவர்கள் ஒரு தோட்டாவுக்கு எண்பது ரூபாய் வீதம் மூன்று தோட்டாவுக்காக இருநூற்றி நாற்பது ரூபாயைச் சேர்த்து அவர்களிடம் கொடுத்தார்கள். சுகன்   நன்றி – காலம்

Continue Reading

தமிழ்த் தேசியமும் சே குவேரா பெனியனும்

திரைப்பட நடிகர்களின் கட் அவுட்டுக்களுக்குப் பாலபிஷேகம் செய்வது, அபிமான நடிகைகளுக்காகக் கோயில் கட்டுவது, அபிமான நடிகர்களுக்காக விரலை வெட்டுவது, அரைவேக்காட்டுத்தனமான மிகை உணர்ச்சித் திரைப்படங்களுக்கும் மலிவுத்தனமாக பாலியல் கிளர்ச்சிகளை உருவாக்கும் விடலைத்தனமான ‘காதல்’ படங்களுக்கும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கும் திரைப்பட ஆய்வாளர்களும் பாராட்டுக் கட்டுரைகள் எழுதுவது, உலக இலக்கியத்தைச் சவால் செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் இலக்கிய எழுத்தாளன் பேய், பிசாசு நம்பிக்கைகளையும் சாதி பெருமிதங்களையும் தூக்கி நிறுத்தும், துப்பட்டாக்களைக் கண்காணிக்கும் சமூக விரோதத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது, திரைப்படப் […]

Continue Reading