விடுதலையின் பாதைகள்

மார்க்ஸியத்திற்குப் பிந்திய சிந்தனைப் போக்குகளான இருத்தலியல், அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற நுண் அரசியல் சிந்தனைகள் யாரும் விரும்பியோ விரும்பாமலோ கடந்த இருபது ஆண்டுகளாகத் தமிழ் அறிவுச் சூழலில் முக்கிய சிந்தனைமுறைமைகளாக நிலைபெற்றுவிட்டன. இந்தப் புதிய சிந்தனைமுறைகளை எதிர்கொண்டு எழுதிய தமிழ் எழுத்தாளர்களை ஒரு ‘மதிப்பீட்டு’ வசதிக்காக மூன்று பிரிவுகளாகத் தொகுத்துக்கொள்ள முடியும். இச்சிந்தனை முறைகளை அக்கறையோடு உள்வாங்கி இவற்றிற்கும் நமது அரசியல், பண்பாட்டுச் சூழல்களுக்குமான பொருத்தங்களையும் பொருத்தப்பாடின்மைகளையும் சீர்தூக்கி இச்சிந்தனைகளை தமிழ் அறிவுப்புலத்திற்கு அறிமுகப்படுத்தியவர்களை முதல் பிரிவினர் […]

Continue Reading

நோயா துன்பம்? மருந்தா துன்பம்? – வ.அழகலிங்கம்

சிங்களவன் தமிழனுக்கும் கட்டாயக் கல்வியையும் கட்டாய நோய்தடுப்பையும் திணித்தான். தமிழனோ கட்டாயப் பிள்ளைபிடியைப் பரிசளித்தான், இதுதான் எங்களது சரித்திரம்! வ.அழகலிங்கம் இலங்கை முதலாளித்துவ இராஜபக்க்ஷ அரசாங்கம் தொப்பிக்கலை வெற்றியைச் சொன்ன மறுகணமே திருகோணமலையில் 1600 ஏக்கர் நிலத்தை அரச மற்றும் தனியார் பொருளாதார நிறுவனங்களுக்கு வழங்கி ஒரு பொருளாதார வலயத்தை உண்டுபண்ணப் போவதாக சன்டேஒவ்சேவர் (15.07.2007) செய்திவெளியிட்டுள்ளது. இந்தக் கூற்றை (BOI) முதலீட்டுத் திணைக்களப் பொது முகாமையாளர் எல். டிக்மன் கூறியுள்ளார். அங்கே 15 மில்லியன் ரூபா […]

Continue Reading

Islamophobia – சேனன்

ஹிஜாப் (Hijab) தடையும் இஸ்லாமிய எதிர்ப்பும் -சேனன் உலகெங்கும் வலதுசாரி அரசுகளும் ஊடகங்களும் ஆசிய, ஆபிரிக்க மக்களின் குறிப்பாக முஸ்லீம் மக்களின் மீதான தாக்குதலை ஓங்கி நடத்துகின்றன. “எங்களது கலாச்சாரத்துக்கு உட்பட்டு நடவுங்கள். அப்படி முடியாதென்றால் இங்கு வர வேண்டாம்” என்று ஏதோ தகப்பன் தனக்கு எழுதி வைத்த காணித்துண்டு போல் இங்கிலாந்து பற்றி பிரதமர் அண்மையில் கூறியது அனைவரும் அறிந்ததே. ஈராக்கில் அநாவசியமாக மில்லியனுக்கும் மேலான அப்பாவி மக்களின் சாவுக்கு நேரடிக்காரணமான இந்த நாய் அமெரிக்க […]

Continue Reading

G-8: – வ.அழகலிங்கம் – தமிழரசன்

அடுத்த G-8 மகாநாடு அந்நியக் கிரகத்தில் வ.அழகலிங்கம் தமிழரசன் G-8 மகாநாட்டில் ஓர் அரசுத் தலைவர் இரண்டு நிமிடங்கள் உரையாற்றுவதற்கிடையில் நாற்பது குழந்தைகள் பசியால் இறந்துவிடுகின்றனர். G-8 மகாநாட்டில் உலகின் மக்கள் தொகையின் பன்னிரெண்டு சதவீதத்தையுடைய 8 நாடுகளைச் சேர்ந்த அரசுத் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஒன்றுகூடிய இந்த ஏகாதிபத்தியவாதிகள் உலக மக்களைப் பற்றிப் பேசினார்கள். அவர்களை அரசியல் – பொருளாதார- இராணுவரீதியில் கையாள்வது பற்றித் திட்டமிட்டார்கள். இன்றைய நவீனத் தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு, இந்த உற்பத்தி […]

Continue Reading

சுகனின் கவிதைகள்

    எண்ணைக் கப்பல் உடைந்து தன் உடல் முழுதும் மசகெண்ணையைப் பூசியபடி கரையொதுங்கும் ஒரு கடற்பறவையைக் கழுவி உயிர் பிழைக்க வைக்கிறார் ஒருவர். *** பல்கேரியாவின் எல்லைவழியே டேன்யூப் ஆற்றைக் கடந்தவர்கள் கருங்கடலில் மூழ்கிக் கலந்து போனார்கள். *** நாட்சம்பளத்திற்குக் கோப்பை கழுவப்போகும் விசாவற்ற பிரபாகரன் இன்றும் இனியும் உனக்கு வேலையில்லையெனச் சொன்ன முதலாளி மொழி கேட்டு ரெஸ்ரோரண்ட் வாசலில் திகைத்துப்போய் நிற்கிறான். அத்துடன் அவன் காணாமற் போகிறான்.     ஒருமுறை காட்டில் வேட்டைக்குப் […]

Continue Reading

வேலைக்காரிகளின் புத்தகம்

ரிஸ் மெத்ரோ நிலையமொன்றிற்தான் “Les Bonnes” நாடகத்திற்கான விளம்பரத்தை நான் பார்த்தேன். இந்த நாடகத்தைக் குறித்துப் பிரம்மராஐன் எழுதிய கட்டுரையொன்றை அப்போது நான் படித்திருந்தேன். நாடகப் பிரதியை எழுதிய Jean Genet குறித்துத் தமிழ்ச் சிறுபத்திரிகைகள் மூலம் சில குறிப்புகளையும் அறிந்திருந்தேன். அந்தத் தூய்மையற்ற சிறிய நாடக அரங்கு பாரிஸின் புறநகர்ப் பகுதியிற் தொழிலாளர் குடியிருப்புகளிடையேயுள்ள ஒரு சதுக்கத்திலிருந்தது. நாடகத்தின் இயக்குனர் அரங்க வாயிலில் நின்று நுழைவுச் சீட்டுக்களை விற்றுக்கொண்டிருந்தார். அந்த நாடக அரங்கில் முப்பதிற்கும் குறைவான […]

Continue Reading

ஆதரிப்பீர் செகோலென் ரோயாலை

” நாம் ஒருபோதும் பெயரளவிலான ஜனநாயகத்தை வழிபடுபவர்களாக இல்லை. இதன் பொருள் நாம் எப்போதும் முதலாளித்துவ ஜனநாயக அரசியல் வடிவிலிருந்து, சமூக உட்கருவைப் பிரித்துப் பார்த்திருக்கிறோம். பெயரளவில் சமத்துவம், சுதந்திரம் என்னும் இனிய மேற்பூச்சின் கீழ் உள்ள சுதந்திரமின்மை, சமத்துவமின்மை என்னும் கசப்பான பகுதியினை நாம் எப்போதும் வெளிப்படுத்தியது அந்த இனிய மேற்பூச்சினை புறக்கணிப்பதற்காகவல்ல. மாறாக மேற்பூச்சில் திருப்தி அடைந்துவிடாமல் அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்துப் புதிய சமூக உள்ளடக்கங்களை நிரப்ப வேண்டுமென உழைக்கும் வர்க்கத்திற்கு உணர்த்துவதற்காகவே. ஆட்சியதிகாரத்தைக் […]

Continue Reading