கிழக்கிலங்கைத் தேர்தல்

– இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். வெளிநாடுகளிலிருந்து கொண்டு அறிக்கைவிடும் போலிப் புரட்சிவாதிகள், கிழக்கு மக்களில் எந்தக் கரிசனமும் அற்றவர்கள். தங்கள் அமைப்புக்களில் கிழக்கு மக்களைத் ‘தீண்டாச்சாதியாக’ நடத்துபவர்கள். இவர்கள் பார்வையில் கிழக்கு மக்கள் ‘மோர்தின்னி முட்டாள்க’ளாகும். இந்தக் கேவலங்களின் குரலைக் கேட்காமல் கிழக்கிலங்கை மக்கள் தங்கள் பிரச்சினையைத் தங்கள் கையில் எடுத்துத் தங்கள் தலைமையைத் தேடவேண்டும். எதிர்வரும் 10.05.08ல் நடக்கவிருக்கும் கிழக்கலங்கைத்தேர்தல், இலங்கையில் இதுவரை நடந்த தேர்தல்களைவிட மிகவும் முக்கிய தேர்தலாக அமையவிருக்கிறது. ஜனநாயக சமுதாய அமைப்பின் முக்கிய […]

Continue Reading

முதலீட்டியத்தின் எரிபொருள் கனவுக் காலம்

–ராஜன் குறை ‘மொழிபெயர்ப்பில் தொலைந்தவை’ என்ற சொற்றொடர் ஆங்கிலத்தில் புழங்குகிறது. ‘மொழிபெயர்ப்பில் தடம் மாறியவை’ என பட்டியல் போட்டால் அதில் காபிடலிஸத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான முதலாளித்துவத்திற்கு முக்கிய இடம் கொடுக்கவேண்டும். இது காபிடலிஸ எதிர்ப்பை முதலாளி – தொழிலாளி முரண்பாடாக சுருக்குவதை சுலபமாக்கியது. வெகுஜன சிந்தனையில் முதலாளியல்ல, முதலீட்டியமே பிரச்சனை என்ற எண்ணம் எழவே வாய்ப்பில்லாமல் போனதால் அரசு முதலீட்டியம் போன்ற கருத்தாக்கங்கள் வெகுஜன பிரக்ஞையில் தமிழில் பரவலாக கவனம் பெறவில்லை, சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகும் […]

Continue Reading

இந்தா கிடக்கு மேளம்!

நூல் விமர்சனம்: சுகன் “சாதியப் போராட்டம் சில குறிப்புகள்: சி.கா. செந்தில்வேல் உடன் நேர்காணல்”. -த.ஜெயபாலன் ‘தேசம்’ வெளியீடு, பக்கங்கள்: 40 “நான் பிறந்தது வண்ணார் சமூகத்தில்” என்று அய்ம்பது ஆண்டுகளைக் கண்ட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியொன்றின் தலைவர் கூறுவதிலிருந்து தொடங்குகிறது இச் சிறு கைநூல். சிங்கள பவுத்த சமூகத்தில் சலவைத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த ஆர். பிரேமதாஸ நாட்டின் அதிபராய் வரமுடியும். தமிழ் இந்து சமூகத்தில் ‘ஒரு வண்ணான்’ தமிழ் அரசியற் கட்சியினது தலைவராக வர […]

Continue Reading

பாப்லோ நெரூதா: ஒரு நூற்றாண்டுத் துரோகம்

-பொடிச்சி உயிர்மை (பிப்ரவரி 2005) ‘பாப்லோ நெருதாவின் துரோகம்’ என்கிற கட்டுரையில் யமுனா ராஜேந்திரன் எழுதுகிறார்: “பாப்லோ நெருதா நூற்றாண்டின் போது நெருதாவின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள், அனைத்துவகையான மார்க்சியர்களின் மீதும் காலம் காலமாக வைக்கப்பட்டு வரும் இருநிலை விமர்சனங்கள்தான். முதல் விமர்சனம் நெருதா பல பெண்களோடு உறவு கொண்டு பிற்பாடு அவர்களை நிராகரித்தார், அவர்களுக்குத் துரோகம் செய்தார் என்பதும், பாலியல் ரீதியில் அவர் பல பெண்களக் கடாசினார், என்பதாகவும் இருக்கிறது. … பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு கார்ல் […]

Continue Reading

இரண்டாம் வருட நினைவஞ்சலி

தமிழ் இளைஞர் பேரவையின் முதலாவது தலைவரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (T.L.O) நிறுவனர்களில் ஒருவரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஃப்ரான்ஸ் பிரதிநிதியாக இயங்கியவரும், மக்கள் கலை இலக்கியவாதியுமான தோழர். சி.புஸ்பராஜா (1951 – 2006) “நான் எந்த விடயத்திலும் மௌனியாக இருக்க விரும்பவில்லை. மௌனியாக இருக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. நான் இவர்களுடன்தான் பேசுவேன், இவர்களுடன்தான் உறவு கொள்வேன் என்ற இறுமாப்பும் என்னிடமில்லை. துப்பாக்கி இல்லாத யாருடனும் நான் எப்போதும் பேசத் தயாராக உள்ளேன். நான் […]

Continue Reading

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறது!

– நிர்மலா ராஜசிங்கம் “21ம் நூற்றாண்டு பெண்ணியச் சிந்தனை” எனும் தலைப்பில் நாவலன் மிகுந்த அபத்தமான கட்டுரை ஒன்றைத் ‘தேசம்’ இணையத்தளத்தில் எழுதியிருக்கிறார். அதற்கு எதிர்வினையாக மட்டுமன்றி சில அடிப்படை விடயங்ளையும் தெளிவுபடுத்தவே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. நாவலனது கட்டுரையில் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் அரிதெனினும் கட்டுரையில் அவரின் தீராத பெண்ணிய வெறுப்பும், பெண் வெறுப்பும்(misogyny) மேலோங்கியுள்ளதாலும் அது தமிழ் பெண்ணியவாதிகளைக் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்ப முயற்சி செய்வதாதாலும் கோட்பாட்டு ரீதியாகவும் தரவு ரீதியாகவும் தவறான அபிப்பிராயங்களை […]

Continue Reading

எதிர்வினை: அ.மார்க்ஸ்

‘அம்மா’ இதழில் யமுனா ராஜேந்திரன் எழுதிய “பின்நவீனத்துவம், தலித்தியம், மார்க்ஸியம்” என்ற கட்டுரைக்கு எதிர்வினையாகத் தோழர்.அ.மார்க்ஸ் எழுதிய “அவதூறுகளுக்குப் பதிலளிப்பது அலுப்பைத்தான் தருகிறது” என்ற கட்டுரை ‘அம்மா’ இதழ் 10ல் வெளியாகிற்று. யமுனா தத்துவார்த்தப் போர்வைக்குள் பதுங்கிக்கிடந்து எழுதிய அவதூறுகளுக்குப் பதிலளித்திருந்த அ. மார்க்ஸ் யமுனாவின் திடீர் மார்க்ஸிய வேடத்தையும், யமுனாவின் கட்டுரையில் பொதிந்திருந்த ஆதிக்கசாதித் திமிரையும், யமுனாவின் அறிவுஜீவி நாடகத்தையும் தோலுரித்திருந்தார். இன்று ‘தேசம்’ இணையத்தளத்தில் யமுனா தொடக்கிவைத்து ‘சத்தியக் கடதாசி’யில் நடந்து கொண்டிருக்கும் விவாதங்களின் […]

Continue Reading