தலைகீழ்: ஒரு பார்வை

‘இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி’யால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘தலைகீழ்’ எனும் தந்தை பெரியாரின் 35ஆவது நினைவேந்தல் 28-12-2008 ல் பாரிஸில் நடைபெற்றது. நிகழ்வு பி.பகல் 2மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவித்திருந்தபோதும் ‘வழமைபோல’ தாமதித்தே நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொள்ளவென லண்டன், நோர்வே போன்ற நாடுகளிலிருந்தும் தோழர்கள் வந்திருந்தனர். தோழியர். விஜி தலைமை வகித்து நிகழ்வை நெறிப்படுத்தினார். அவர் தனது தலைமையுரையில் “பெரியாரை நினைவு கூர்வதும் பெரியாரியல் குறித்த ஆய்வுகளும் புகலிடத்தில் இது வரை நடைபெறாத நிகழ்வுகளாகும். […]

Continue Reading

நூல் அறிமுகம்

ஈழம்: இன்றெமக்கு வேண்டியது சமாதானமே ஷோபாசக்தி: அ.மார்க்ஸ் வெளியீடு: பயணி இலங்கை இராணுவம் கிளிநொச்சி எல்லைக்குள் காலடி எடுத்து வைத்து சுமார் 4 மாதங்களாகப் போகின்றன. பன்னாட்டு அரசு சாரா அமைப்புக்கள், ஐ.நா. நிறுவனங்கள் எல்லாம் போர்ப் பகுதியிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டும் கிட்டத்தட்ட நான்கு மாதங்களாகப் போகின்றன. வேறெப்போதுமில்லாத அளவிற்குப் புதிய புதிய விதிகளை இயற்றி இலங்கை ஊடகங்கள் கடும் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரம் படுமோசமாகச் சீரழிந்துள்ளது எனச் சென்றமாதம் இங்கு வந்து போன […]

Continue Reading

சீமானும் செல்வியும்

-ஷோபாசக்தி இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, பெ. மணியரசன் உள்ளிட்டவர்கள் அண்மையில் தமிழக அரசால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவர்களின் கைதுகளைக் கண்டித்தும் தமிழக அரசின் கருத்துச் சுதந்திர மறுப்பு எதோச்சதிகாரத்தைக் கடுமையாகச் சாடியும் வலைப்பதிவுகளில் தோழர்கள் எழுதிக் குவித்துள்ள கட்டுரைகளைப் படிக்கையில், கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தி நீண்ட நாட்களாகவே பேசியும் எழுதியும் வருபவன் என்ற முறையில் உள்ளபடியே எனது கண்கள் பனிக்கின்றன. இந்த வலைப் பதிவாளர்களல்லவா எனது தோழர்கள் எனத் திரும்பத் திரும்ப எனது உதடுகள் […]

Continue Reading

நீ போராளியல்ல!

-சுகன் உன் இன்னுயிரை ஈந்தது போதும் லோகிதாசா எழுந்திரு! செய்திகளைச் செவிமடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றி எனக்கூறி விடைபெறுகிறார் அறிவிப்பாளர் லோகிதாசா எழுந்திரு! நாடகம் முடிந்தபின் உன்னை வழமைபோல் கூட்டிப்போக அப்பா வந்திருக்கிறார் லோகிதாசா எழுந்திரு! கண்டியரசனில் உன் மாமா உன்னை உரலில் போட்டு இடிக்க அம்மா பார்த்திருந்து அழுகிறாள் அரிச்சந்திர நாடகத்திலோ நீ பாம்புதீண்டி இறக்கிறாய் எழுந்திருக்கமாட்டாமல் நீள்துயில் கொள்கிறாய் இப்போது இடையில் திரைமூடி அடுத்த காட்சி தொடங்கலாம் நாடகத்தில்! லோகிதாசா எழுந்திரு! நீ போராளியல்ல […]

Continue Reading

பின்நவீனத்துவ நாடோடிகள் II

குமரன்: வட்டுக்கோட்டை, கன்னியாகுமரி, சூரிச், கொழும்பு, வட்டுக்கோட்டை, கொழும்பு, பரிஸ். தற்காலிக முகவரி: கார்ஜ் லெ கொனேஸ் “நீ விசா இல்லாமை ஜேர்மனில இருக்கிறாயெண்டெல்லோ கேள்விப்பட்டன்” “இல்லை மாமா நான் உள்ளுக்கை இருந்தனான்” “கேஸ் ஆர் எழுதினது?” “கேஸ் நல்ல கேஸ், நான் தான் சொதப்பிவிட்டன், ‘உதயன்’ பேப்பரிலை வேலை செய்தனானெண்டு குடுத்தது, அவன் உதயன் பேப்பரின்ரை சின்னம் என்னண்டு கேட்டான்,எனக்குத் தெரியயில்லை! “நீ புலனாய்வுப் பிரிவிலையெல்லோ வேலை செய்தனி” “அது தம்பி மாமா!” “இடையுக்கை உனக்கு […]

Continue Reading

கவிதை: சுகன்

அதியற்புதமான ஓவியமொன்றை என்னை முன்னிலைப்படுத்தி எதிரி வரைகின்றான் வேகமாய் ஓடி இளைத்து மூச்சுவாங்கி நின்று நிதானித்து நடந்து களைத்து ஊர்ந்து முடியாது இயக்கமிழந்து வீழ்ந்து கிடக்கையில் எதிரி வந்து ஆதரவோடு பற்றுகிறான் எனது தஞ்சக்கேட்டை அவன் எப்போதுமே சுட்டிக்காட்டியவனல்ல என்னோடு அவன் எப்போதும் பேசியதுமில்லை நாம் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்ததுமில்லை நாம் ஒருவருக்கொருவர் கண்ணிற்குத் தெரியாத எதிரிகளுமல்லர் ஒரு துரும்பாகக்கூட மதிக்காத அவன் கைகளைத் தட்டிவிடுகிறேன் இம்மியளவும் பிசகாது இவ்விடத்திற்தான் நான் வீழ்ந்துகிடப்பேன் இவ்விடத்திற்குத்தான் நான் […]

Continue Reading

ஈழத்தின் அவலமும் தமிழகத்தின் குரல்களும்

– ஷோபாசக்தி (ஈழப் பிரச்சினையின் இன்றைய நிலை குறித்து, இம்மாத இறுதியில் தமிழகத்தில் வெளிவரவிருக்கும் தொகுப்பு நூலுக்காக எழுதப்பட்ட கட்டுரை.) சிறிலங்காப் பேரினவாத அரசால் இன்று தமிழ்மக்கள் மீது உச்சக்கட்டத்தில் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இராணுவத் தாக்குதல்களிற்கு எதிராகவும், சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக இரத்தமும் கண்ணீரும் சிந்திக்கொண்டிருக்கும் தமிழ் மக்களிற்கு பரிவும், ஆதரவும் காட்டும் முகமாகவும் கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எழுச்சிகளையும் நிகழ்வுகளையும் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். மறுபுறத்தில் மகிந்த ராஜபக்ச அரசின் அப்பட்டமான இனவாத அணுகுமுறையையும், மனிதவுரிமை […]

Continue Reading