கண்டன அறிக்கை

(பத்திரிகையாளர் டி.அருள்எழிலன் இந்த அறிக்கையை எனக்கு அனுப்பியிருந்தார். ஊடகவியலாளர்கள் மீதான இலங்கை அரசின் படுகொலைகளையும் கைதுகளையும் கடத்தல்களையும் இந்த அறிக்கை வன்மையாகக் கண்டனம் செய்கிறது. அறிக்கையில் சில நெருடல்களும் இல்லாமலில்லை. கேதிஸ் லோகநாதன், ரேலங்கி செல்வராஜா போன்றவர்களை இலங்கை அரசே கொன்றிருப்பதாக இவ்வறிக்கை சொல்லியிருப்பினும் அவர்கள் இருவரும் புலிகளால்தான் கொல்லப்பட்டார்கள். மறுபுறத்தில் இலங்கையின் இருபெரும் அதிகாரசக்திகளில் ஒன்றான புலிகளால் கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள்மீது இந்த அறிக்கை இரக்கம் காட்டவில்லை. ஆனால் அறிக்கையின் இந்தப் பலவீனமான அம்சங்களால் […]

Continue Reading

நூல் அறிமுகம்

-சுகன் கம்யூனிஸ இயக்க வளர்ச்சியில் தமிழ்ப்பெண்கள் வீ.சின்னத்தம்பி வெளியீடு:ஐரோப்பிய கீழைத்தேய தொடர்பு மையம். முற்குறிப்பு: எனது ஊரவரான நூலாசிரியர் வீ.சின்னத்தம்பி அவர்களை 1984இன் இறுதிப் பகுதியில் கடைசியாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குப் பின்புறத்தே உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன். “வெள்ளைப் பூனையானாலென்ன கறுத்தப் பூனையானாலென்ன எலி பிடித்தாற் சரி” என்ற டெங் சியாவோ பிங்கின் புகழ்பூத்த பொன்மொழிக்கு அவரிடம் என்ன விளக்கம் எனப் பாடம் கேட்க நானும் ஒரு தோழரும் போயிருந்தோம். இதோ! இதில் இருக்கும் செத்த […]

Continue Reading

நூல் விமர்சன அரங்கு – ஒலி வடிவம்

இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியுடன் இணைந்து இலங்கை ஜனநாயக ஒன்றியம் (லண்டன்) நடாத்திய நூல் விமர்சன அரங்கு – ஒலிவடிவம். தலைமை – ச.வேலு விமர்சகர்கள் – கே. தங்கவடிவேல்,மு. நித்தியானந்தன்,ந. சரவணன்,அ. தேவதாஸ் நாள் –  06 டிசம்பர் 2008 பகுதி -1 http://media.imeem.com/m/oiGtOGq-ga/aus=false/ பகுதி – 2 http://media.imeem.com/m/0Fpj8_jf42/aus=false/ பகுதி – 3 http://media.imeem.com/m/vE4O-Y-461/aus=false/

Continue Reading

வேட்டையாடுதலும் வேசம்போடுதலும்

-சுகன் மார்க்ஸியத்தின் எதிரிகள் மார்க்ஸியத்துட்புகுந்து அதை நீர்த்துப்போகச்செய்யவும் அதன் சாரத்தை அதிலிருந்து பிய்த்தெறியவும் முயல்வது இப்போது புதிதாகத் தொடங்கிய ஒன்றல்ல. மார்க்ஸியம் எப்போதுமே அதனது உள்ளும் புறமுமான எதிரிகளின் சவால்களுக்கு முகங்கொடுத்து வந்திருக்கிறது. விமர்சனங்களிற்கு முகங்கொடுக்கவும் கால தேச வர்த்தமானங்களிற்கேற்பத் தன்னை அடையாளப்படுத்தவும் தனது போராட்டப்பாதையைத் தேர்ந்துகொள்ளவும் மக்களையும் மக்களின் எதிரிகளையும் இனங்கண்டு மக்களிலிருந்து கற்றுக்கொண்டும் கற்றுக்கொடுத்தும் வருகிறது. பாரில் கடையர், சமூகத்தில் ஒதுக்கப்பட்டோர் என தனது அடித்தளத்தில் நின்று அது ஒட்டுமொத்த மானுட மேன்மைக்காக இயங்குகிறது. […]

Continue Reading

பின்நவீனத்துவ நாடோடிகள் III

                  மற்றுமொரு நாளில் வடகிழக்கில் தென்கிழக்கில் மேற்கில் மூன்றுமுறை பல்லிசொல்ல உறவினர்கள் மரணம் எனவுரைக்கும் வருட பஞ்சாங்கம் வந்துபோனது   தொடுவானம் தெரியாத அடைத்த இருளில் திசையும் தெரியவில்லை துக்க வரவுரைக்கும் காகமும் இங்கில்லை மயில் வெள்ளையாடை தாமரைப்பூ நீரோற்பலம் கனவினிற்காண   புதிய பஞ்சாங்கம் வாங்கியாயிற்று கனவுவர மறுக்கிறது (தாயகம்)   1:உங்களுக்கு சுவிஸோ பரிஸோ பிடிச்சிருக்கு!: அது சொர்க்கமெல்லோ!  2:நீ கனோன் ரியாட்சியை நம்பாதே!அவள் உனக்கு விசா எடுத்துத் தரமாட்டாள்!அவள் உப்பிடி நிறைய சிறீலங்கனைச் சுத்தியிருக்கிறாள்!

Continue Reading

முன்னொரு காலத்தில் ‘பொங்கல்’ இருந்தது

-ஷோபாசக்தி முற்றுகைக்குள் சிக்கியிருந்த கிளிநொச்சி ஜனவரி 2ம் தேதி இலங்கை இராணுவத்திடம் வீழ்ந்தது. அதே நாளில் கொழும்பில் வான்படைத் தலைமையகம் முன்பாக மனித வெடிகுண்டு வெடித்தது. அன்று முழுவதும் தொலைபேசி, தொலைக்காட்சி, இணையம் என்று மண்டையைப் போட்டுப் பிய்த்துக்கொண்டிருந்துவிட்டு அதிகாலையில் தூங்கச் சென்று ஒருகண் மூடியபோது ‘த சண்டே இந்தியன்’ பத்திரிகையிலிருந்து போன் செய்து ‘பொங்கல் குறித்து ஒரு கட்டுரை எழுத முடியுமா’ எனக் கேட்டார்கள். பொங்கல் வரப்போவது அப்போதுதான் என் ஞாபகத்திற்கு வந்தது. போருக்கு முந்தைய […]

Continue Reading

வெள்ளாளர்க்கு நாத்திகமும் தலித்துகளிற்கு ?

-சுகன் கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது அவ்வையார் வாக்கு. அது அனேகமாக வெள்ளாளர்களுக்குத்தான் சொல்லப்பட்டிருக்க வேண்டும். யாழ்ப்பாண சமூக அமைப்பில் மட்டுமல்ல,தமிழ்ச்சமூக அமைப்பிலும் அதிகார அமைப்பிலும் கோவில்களின் இடம் திட்டவட்டமாகவே அசைக்கமுடியாதவாறு வெள்ளாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது எனச்சொன்னால் அதை இறந்த காலமாகக் கருதி உலாந்தாக்காறர்களின் தோம்புப் பதிவுகளைத்தேடி நாம் ஆய்விற்குப் போகவேண்டியதில்லை.தீண்டத்தகாதவர்கள் உட்பிரவேசிக்கக்கூடாது என்பது ஆறுமுக நாவலர் வகுத்த சமய நெறி,சைவநெறி,வாழ்க்கை முறை. நிர்மலா அக்கா தேசிய உருவாக்கத்தில் கிரேக்க தொன்மக் கடவுளை உதாரணப்படுத்தி அக்கடவுளிற்கு […]

Continue Reading