காலக் கொடுமை

ஜெயமோகனின் வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் ‘கற்பழித்ததா இந்திய இராணுவம்’ என்ற கட்டுரையைப் படிக்கையில் மனம் பதறிப்போகிறது. இந்திய அமைதிப் படையில் பணியாற்றிய மூத்த இராணுவ அதிகாரிகள் “இலங்கையில் இந்திய அமைதிப் படையினர் பாலியல் வன்புணர்வுக் கொடுமைகளில் ஈடுபடவே இல்லை” என அந்தக் கட்டுரையில் சாதிக்கிறார்கள். அவர்களின் கருத்துகளை வழிமொழியும் ஜெயமோகன் ‘அமைதிப் படையினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாமே புலிகளாலும் அவர்களது தமிழக ஆதரவாளர்களாலும் முன்னெடுக்கப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களே’ என்ற முடிவுக்கு வருகிறார். நமது கண்முன்னேயே, இந்திய அமைதிப் […]

Continue Reading

காலச்சுவடு ஆசிரியரிடம் சில கேள்விகள்

‘எதுவரை’ இணையத்தளத்தில் வாசகர்களின் கேள்விகளுக்கு ‘காலச்சுவடு’ ஆசிரியர் கண்ணன் பதிலளிப்பார் என அறிவித்தல் வெளியாகியுள்ளது. எனவே கீழ்க்கண்ட கேள்விகளை ‘எதுவரை’ இணையத்தளத்திற்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்துள்ளேன். பதிலளிக்கவிருக்கும் ‘காலச்சுவடு’ ஆசிரியருக்கும் பதில்களை வெளியிடவிருக்கும் ‘எதுவரை’ இணையத்தளத்திற்கும் முன்கூட்டியே நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். 1. கடந்த மார்ச் மாதம் லண்டனில் நீங்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், உங்களது ‘சுவடி’ நிறுவனம் ‘பிராமின் டுடே’ பத்திரிகையை தயாரித்துக் கொடுப்பது குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டபோது ‘பிராமின் டுடே’ க்கும் உங்களது நிறுவனத்திற்கும் இடையே உள்ளது […]

Continue Reading

களத்திலிருந்து இவர்கள் இறுதிவரை விலகுவதேயில்லை

யாழ்ப்பாணத்தின் மயிலிட்டிக் கிராமத்தில் பிறந்த புஷ்பராணி, ஈழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்ககால அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கியவர். தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவு அமைப்பாளராக இருந்தவர். ஆயுதம் தாங்கிய ஈழப் போராட்ட வரலாறில் முதலாவதாகச் சிறைக்குச் சென்ற  இரு பெண் போராளிகளில் ஒருவர். புஷ்பராணி எழுதி, இம்மாதம் ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பகத்தால் வெளியிடப்படவிருக்கும்  அகாலம் : ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள் நூலுக்கு கவிஞர் கருணாகரன் அளித்திருக்கும் […]

Continue Reading

வெள்ளைக்கொடி விவகாரம்

தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (லண்டன்) நடத்தும் நிகழ்வில் ‘காலச்சுவடு’ ஆசிரியர் கண்ணன் உரையாற்ற அழைக்கப்பட்டிருப்பது குறித்துப் பல்வேறுவிதமான கருத்துகள் தோழர்களால் Facebook லும் மின்னஞ்சல்களிலும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. இது குறித்து எனது கருத்துகளையும் தோழர்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தக் குறுங்கட்டுரையின் நோக்கம். “நாங்கள் மாற்று செயற்பாட்டாளர்களுமல்ல, மாற்று உரையாடல்களை நடத்துவது தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகத்தின் நோக்கமும் இல்லை ” எனத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் த.மொ.ச.செயற்பாட்டகம், ‘பல தரப்புகளும் பேசுவதற்குக் களம் அமைத்துக் கொடுப்பதே நோக்கம்’ என்று வெளிப்படையாக […]

Continue Reading

Warscapes in conversation with Shobasakthi

Warscapes: Do give us some political and personal context with regards to your novel Traitor. Shobasakthi: On July 25, 1983, the Sri Lankan government planned and killed thirty-five Tamil political prisoners at Welikade Prison, with eighteen other Tamil prisoners slaughtered a couple of days later.  The prison authorities were thoroughly complicit in the massacre even though […]

Continue Reading